திருச்சி ; திருச்சி அருகே வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலத்தை மீட்ட போலீசாருக்கு, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையாளி முகத்தை சிதைத்து பாலத்தின் கீழ் தூக்கி வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் இறந்தவர் நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு கீழே மற்றொரு இளைஞர் உடல் இருப்பது குறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் காவல்துறையினர் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி.சுஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேரின் கொலை செய்யப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.