திருச்சி ; திருச்சி அருகே வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலத்தை மீட்ட போலீசாருக்கு, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையாளி முகத்தை சிதைத்து பாலத்தின் கீழ் தூக்கி வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் இறந்தவர் நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு கீழே மற்றொரு இளைஞர் உடல் இருப்பது குறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் காவல்துறையினர் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி.சுஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேரின் கொலை செய்யப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.