திண்டுக்கல் ; வத்தலக்குண்டு அருகே வீருவீட்டில் பச்சிளங் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சை மணி (38). இவர் இதே பகுதியைச் சேர்ந்த சுமார் இரண்டரை வயது பால்வாடி படிக்கக்கூடிய பச்சிளங் குழந்தையை நேற்று பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோர்களும், உறவினர்களும் விருவீடு போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் மனு கொடுத்தனர்.
மேலும் படிக்க: சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!
இதுகுறித்து விசாரித்த போலீசார், நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுரை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, இரண்டரை வயதுள்ள பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி பிச்சைமணி மீது நிலக்கோட்டையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து பிச்சைமணியை கைது செய்தனர்.
பின்னர், நிலக்கோட்டை மேஜிஸ்திரேட் கோர்ட் மேஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தி, பிறகு விசாரித்து மேஜிஸ்ட்ரேட் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.