தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே கால்நடை மருந்தகத்தில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மருந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி தேரியூர் பகுதியில் ஆறுமுகராஜ் என்பவருக்கு சொந்தமான கால்நடை மருந்தகம் உள்ளது. சம்பவத்தன்று ஆறுமுகராஜ் மருந்தகத்தில் கண்ணாடியிலான கதவை வெளியே பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மருந்தகத்தில் ஆளில்லாததை நோட்டமிட்ட அவர்கள் கடையின் முன்பு இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை உணவான கேனான் புட் நாய் என்ற நாய் உணவை திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்து ஆறுமுகராஜ் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருடி சென்ற நபர்கள் அது கால்நடை உணவுதான் என்று திருடினார்களா..? இல்லை வேறு ஏதும் உணவு பொருட்கள் என்று திருடி விட்டார்களா என தெரியவில்லை..? தொடர்ந்து இதுகுறித்து ஆறுமுகராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.