தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே கால்நடை மருந்தகத்தில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மருந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி தேரியூர் பகுதியில் ஆறுமுகராஜ் என்பவருக்கு சொந்தமான கால்நடை மருந்தகம் உள்ளது. சம்பவத்தன்று ஆறுமுகராஜ் மருந்தகத்தில் கண்ணாடியிலான கதவை வெளியே பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மருந்தகத்தில் ஆளில்லாததை நோட்டமிட்ட அவர்கள் கடையின் முன்பு இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை உணவான கேனான் புட் நாய் என்ற நாய் உணவை திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்து ஆறுமுகராஜ் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருடி சென்ற நபர்கள் அது கால்நடை உணவுதான் என்று திருடினார்களா..? இல்லை வேறு ஏதும் உணவு பொருட்கள் என்று திருடி விட்டார்களா என தெரியவில்லை..? தொடர்ந்து இதுகுறித்து ஆறுமுகராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.