வேலூர் : ஆந்திர தமிழக எல்லையோரம் சாலையோரம் உள்ள மரத்தின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள சைணகுண்டா சோதனைச் சாவடி அருகே ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியில் இருந்து சொகுசு காரில் 5 பேர் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சைனகுண்டா அருகே சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்து உள்ளது. இதனால் நிலை தடுமாறிய கார் அருகே உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த பலமநேரி பகுதியை சேர்ந்த ஜெயசிம்மா (26), மற்றும் அவரது உறவினரான உபேந்திரா (46) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் லோகேஷ், வம்சிகிருஷ்ணா, நானி (எ) மகேஷ் ஆகிய 3 பேரும் படுகாயமடைந் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.