ஓய்வு பெற இன்னும் 20 நாட்களே.. விசாரணைக் குழு அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட் : பெரியார் பல்கலை., பதிவாளர் சஸ்பெண்ட்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவாளர் தங்கவேல் மீது பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவது, ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுந்தன.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையின்படி தங்கவேல் மீதான புகாரில் 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.