ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே ஆண்டாள் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கொத்தமங்கலம், தயிர்பள்ளம் பகுதியை சேர்ந்த அன்புசெல்வன் என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் காகித ஆலையில் உள்ள இயந்திரத்தின் அருகே அன்புசெல்வன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மறுசுழற்சி செய்வதற்காக பழைய காகிதங்களை அரவை செய்து காகிதங்களை உலர்த்தும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட அவருடன் பணியாற்றும் பணியாளர்கள் உடனடியாக காகித ஆலை நிர்வாகத்தினருக்கும், பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வயதே ஆன இளைஞன் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.