விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவகத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பெயரில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி செல்லும் சாலையில் கவலூர் என்ற இடத்தில் உள்ள ஜோதி பட்டாசு கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த கடையில் 200 கிலோ மதிப்புடைய கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையில் இருந்த மதுரையை சேர்த்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விருதுநகரில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.