200 ml ஆவின் பால் விலை திடீர் உயர்வு. 200 mlக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு, வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 ML ஆவின்பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வந்துள்ளது.
தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:- ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் COW Milk ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் 15 -11-2023 முதல் நிறுத்தம் செய்யப்பட்டு 16 ஆம் தேதி முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் வைலட் நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 200 மில்லி பாக்கெட் விற்பனை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஆவின் டிலைட் 200 ml பாக்கெட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. 200ml ஆரஞ்சு நிற பாக்கெட்டாக இருந்தபோது ₹9.50 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ரூபாய் 10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 200ml பால் பாக்கெட்டுக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.