200 ml ஆவின் பால் விலை திடீர் உயர்வு. 200 mlக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு, வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 ML ஆவின்பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வந்துள்ளது.
தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:- ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் COW Milk ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் 15 -11-2023 முதல் நிறுத்தம் செய்யப்பட்டு 16 ஆம் தேதி முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் வைலட் நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 200 மில்லி பாக்கெட் விற்பனை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஆவின் டிலைட் 200 ml பாக்கெட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. 200ml ஆரஞ்சு நிற பாக்கெட்டாக இருந்தபோது ₹9.50 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ரூபாய் 10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 200ml பால் பாக்கெட்டுக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
This website uses cookies.