Categories: தமிழகம்

தரிசனம் செய்ய சிறப்பு கவுன்ட்டரில் நின்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ.20 ஆயிரம் அபேஸ் : சமயபுரம் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி : தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா விராலிமலை ஒன்றியம் லெட்சுமணபட்டி ஊராட்சியில் உள்ள சின்னபாண்டுராம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 50).

விவசாயியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், காயஸ்ரீ என்ற மகளும், ஓம்பிராஷ் என்ற மகனும் உள்ளார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமணபட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார்.

நாளை இவருடைய மகன் பிறந்தநாளை முன்னிட்டு துணி எடுப்பதற்காக இருபதாயிரம் பணம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது சிறப்பு கவுண்டர் 100 ரூபாய் கட்டண தரிசன கவுண்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு வரிசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூ.20,000 பணத்தை பிளேடு போட்டு திருடிச் சென்றனர்.

மூலஸ்தானத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உண்டியல் காசு போடுவதற்காக பாக்கெட்டில் கைவிட்ட போது பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது.

கோயில் வளாகத்துக்குள்ளையே பிளேடு போட்டு பணத்தை திருடி சென்றதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிளேடு போட்டதில் அவருடைய வேஷ்டி மற்றும் டவுசர் பாக்கெட் கிழிந்திருந்தது.

இது குறித்து சமயபுரம் கோயில் பணியாளர்களிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால் கோயில் நிர்வாக பணியாளர்கள் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பச்சமுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சீமானின் டூர்.. அதிர்ச்சி கொடுத்த ராணிப்பேட்டை நிர்வாகி.. அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாதக!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…

5 minutes ago

திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!

ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…

55 minutes ago

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

12 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

13 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

14 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

14 hours ago

This website uses cookies.