திருச்சி : வடிவேலு பட பாணியில் ரூ 22 லட்சம் மதிப்புள்ள 210 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுதலையூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரெங்கராஜ் (வயது 48), பெருமாள்(வயது 45). இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 210 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
பின்பு அந்த ஆடுகள் அனைத்தையும் திறந்தவெளியில் தற்காலிக பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளனர். அதன் பிறகு இருவரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது வடிவேல் பட பணியில் 210 ஆடுகள் இருந்த தடயமே இல்லை.
ஆடுகள் மற்றும் அவை அடைக்க அமைக்கப்பட்டிருந்த பட்டி என அனைத்தையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதனால் ரெங்கராஜ் பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை என்கின்றனர்.
சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. திருட்டு குறித்து சிறுகனூர் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.