தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் : 7பேர் கைது
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி “ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0 மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் காந்திபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வேலவன்புதுக்குளம் கிராமத்தில் சசிகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு 82 மூடைகளில் இருந்த சுமார் 2500 கிலோ கஞ்சா பறிமுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா மற்றும் வேன், 2 கார். 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.