Categories: தமிழகம்

பழங்குடி மக்கள் வசிக்க எதிர்ப்பு… கிராமத்தினர் துரத்தியதால் குழந்தைகளுடன் வெளியேறிய 27 பேர் : அரணாக நின்ற தாசில்தார்!!

விழுப்புரம் : சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்கள் கோவில் பள்ளிக்கூடம் எதிரில் சமைத்து சாப்பிட்டு உறங்குவதும் என வாழ்ந்து வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடும்ப அட்டை, பேங்க் புக், ஆதார்கார்டு ஓய்வுதியம் வழங்கப்பட்டது.

வருவாய் துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே தங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியேற கூறியதால் அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள புளிய மரத்தில் தஞ்சமடைந்தனர்.

மேலும் பள்ளியில் படித்துவந்த சிறுமியை சக மாணவர்கள் வெளியேற்றியது கண்ணீர் மல்க அழுதுகொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சின்னசெவலை கிராமத்தில் பல வருடங்களாக தங்கி இருப்பதாகவும் நாங்கள் தங்குவதற்கும் எங்களின் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு வந்து விட்டோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும் வீடும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

விரைவில் பட்டா வழங்குவதாகவும் அதுவரைக்கும் ஆலங்குப்பம் பகுதியில் தங்குமாறும் தாசில்தார் கூறினார். அதன் பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

16 minutes ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

37 minutes ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

1 hour ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

2 hours ago

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

2 hours ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

3 hours ago

This website uses cookies.