விழுப்புரம் : சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்கள் கோவில் பள்ளிக்கூடம் எதிரில் சமைத்து சாப்பிட்டு உறங்குவதும் என வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடும்ப அட்டை, பேங்க் புக், ஆதார்கார்டு ஓய்வுதியம் வழங்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே தங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியேற கூறியதால் அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள புளிய மரத்தில் தஞ்சமடைந்தனர்.
மேலும் பள்ளியில் படித்துவந்த சிறுமியை சக மாணவர்கள் வெளியேற்றியது கண்ணீர் மல்க அழுதுகொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சின்னசெவலை கிராமத்தில் பல வருடங்களாக தங்கி இருப்பதாகவும் நாங்கள் தங்குவதற்கும் எங்களின் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு வந்து விட்டோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும் வீடும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
விரைவில் பட்டா வழங்குவதாகவும் அதுவரைக்கும் ஆலங்குப்பம் பகுதியில் தங்குமாறும் தாசில்தார் கூறினார். அதன் பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.