தமிழகம்

60 வயது நபருடன் 6 பீர் குடித்த 27 வயது இளம்பெண் லாட்ஜில் மர்ம மரணம்!

சென்னை வேளச்சேரியில் 60 வயது முதியவருடன் தங்கியிருந்த 27 வயது பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை, வேளச்சேரி – தரமணி 100 அடி சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இங்கு 60 வயது முதியவர் ஒருவர், 27 வயது இளம்பெண் உடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில், இந்த இளம்பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக முதியவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விசாரணையில், சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோதி (60). இவருக்கு வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சசிகலா (50) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட, கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த அவரது 2வது மகள் ரம்யா (27) உடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் ரம்யாவும், ஜோதியும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். முன்னதாகவே, ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இதில், அன்று இரவு ரம்யா 4 பீர் குடித்துள்ளார்.

பின்னர் இருவரும் தூங்கி இருக்கிறார்கள். அப்போது, நள்ளிரவில் எழுந்த ரம்யா, தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஜோதியிடம் கூறி உள்ளார். அதற்கு டாக்டரிடம் செல்வோமா என முதியவர் கேட்க, வேண்டாம் என ரம்யா கூறினாராம். இதனையடுத்து, காலையில் மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்தநிலையில், ரம்யா குளித்துவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

அப்போது, ரம்யாக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து ரம்யா உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தெரியவரும் என வேளச்சேரி போலீசார் தெரிவித்தனர். அதேநேரம், அவர் அருந்திய பீர் பாட்டிலை சோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

21 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

34 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

59 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

2 hours ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.