Categories: தமிழகம்

உதகை மலை ரயிலுக்காக தயாரிக்கப்பட்ட 28 புதிய பெட்டிகள் : வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை ஓட்டம்!!

கோவை : பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரித்த புதிய பெட்டிகளுடன் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் மிகவும் பழமையானவை. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய ரெயில் பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்தது.

அதன்படி சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நீலகிரி மலை ரெயிலுக்காக 28 பெட்டி தயாரிக்கப்பட்டது.

அவை பல்வேறு காலகட்டங்களில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. புதிய ரெயில் பெட்டிகள் பயணிகள் அமர வசதியாகவும் இயற்கை காட்சிகளை ரசிக்க வசதியாக பெரிய ஜன்னல் கணணாடிகளுடன் உள்ளன.

இந்த நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் பிரேக் பிடித்தல் தரம், செங்குத்தான மலைப் பகுதிகளில் செல்லும் போது பெட்டிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஆர்.டி.எஸ்.ஓ. பரிசோதனை திட்ட ரெயில்வே இயக்குனர் அனஞ்செய் மிஸ்ரா தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தனர்.

அனஞ்செய் மிஸ்ரா உள்பட அதிகரிகள் குழுவினர் மேற்பார்வையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் மலை ரெயில் என்ஜினில் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புதிய பெட்டிகளுடன் மலைரயில் சோதனை ஓட்டமாக காலை 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மலைப்பகுதியில் ரெயில் செல்லும் போது வேகம் பிரேக் பிடித்தல் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முதல் அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி வரை பல கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயிலில் இணைக்கப்படும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

செந்தில் பாலாஜியால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்.. எம்பியும் சேர்ந்ததால் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்கள் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…

25 seconds ago

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

50 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

2 hours ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

3 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

3 hours ago

This website uses cookies.