விருதுநகர் : விருதுநகரில் காரில் கடத்தி வரப்பட்ட 288 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்- சிவகாசி சாலையில் குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்ததில் இன்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருதுநகர் பாண்டி நகர் பகுதியைச் சார்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த காரில் கடத்தி வரப்பட்ட 288 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், விருதுநகர் யானைகளை தெருவில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்றில் பார் எடுத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.
நாளை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக டாஸ்மார்க் கடைகள் 3 நாட்கள் மூடப்பட உள்ள நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்தா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் ஓட்டி வந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.