கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா கொடிசியா அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், மாநகராட்சி பூங்காக்களில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச கண், பல் பரிசேதனை முகாம் நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு முதல் மருத்துவ காப்பீடு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவது, அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில், வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த விழாவில் கோவை ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார், KCP Infra Limited நிறுவனர் மற்றும் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.சந்திரபிரகாஷ், பெருளாளர் அம்மாசையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் விஜய் டிவியின் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன், மாளவிகா, நித்ய ஸ்ரீ ஆகியோர் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.