தமிழகம்

பள்ளி மாணவியின் வாயை பொத்தி கூட்டு பாலியல்.. புதருக்குள் நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாடு வியாபாரி இவருடைய 13 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் .

சிறுமி கடந்த 16ஆந் தேதி 7.30 மணியளவில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர் மறைவு பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அணைக்கட்டு தாலுகா தாங்கல் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

மதுபோதையில் இருந்த 3 பேரும் சிறுமியை மடக்கி பிடித்து வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கி சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் சிறுமியை மிரட்டி மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே இயற்கை உபாதைக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தந்தை கையில் டார்ச் லைட்டுடன் தேடிச் சென்றுள்ளார்.

இதையும் படியுங்க: 15 வயது சிறுமியின் உயிரை பறித்த பீட்சா, பர்கர் : துரித உணவு காரணமா?!

சிறிதுதூரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டது அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு மகள் அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்து வீரப்பன், இளமதன், சின்னராசு ஆகியோர் தப்பி ஓடினர். 3 பேரையும் அவர் விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர்.

தனது மகளை அங்கு நடந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி உடனடியாக அவளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது அதனால் மனவேதனை அடைந்த தொழிலாளி நேற்று முன்தினம் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்க சென்றார்.

எல்லை பிரச்சினையால் அவரிடம் புகார் பெறாமல் பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் போலீசார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வீரப்பன் உள்பட 3 பேரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று சிறுமி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஆய்வாளர் காஞ்சனா விசாரணை நடத்தி வீரப்பன், மதன், சின்னராசு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மூன்று பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

13 வயது பள்ளி சிறுமியை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 hour ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

3 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

3 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

4 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

5 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

5 hours ago

This website uses cookies.