கோவை: தடாகம் பகுதியில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை திருடி வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதி வீரபாண்டி புதூரை சேர்ந்தவர்கள் செல்வம்(19), சிவகுமார் (36), மற்றும் 16 வயது சிறுவன்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் மூடப்பட்டு இருக்கும் செங்கல் சூளைகளில் உள்ள பழைய இரும்பு மற்றும் வயர்களை(செம்பு கம்பிகளுக்காக) திருடி விற்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் சேம்பர் ஒன்றில் இரும்பு கம்பிகளை திருட முற்படும்போது அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே திருடி வைத்திருந்த 11 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பிகள் உட்பட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை அடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வம் மற்றும் சிவகுமார் சிறைக்கும் 16 வயது சிறுவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.