தேனியில் தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கம்பம் நகர திமுக துணை சேர்மன் மற்றும் அவரது கணவரான திமுக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி துணை சேர்மன் சுனோதா மற்றும் அவரது கணவரான திமுக கம்பம் நகர தெற்குச் செயலாளராக செல்வகுமார் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் ஜவுளி நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி தருவதாகவும், நான்கு வருடங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி, சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மூன்று கோடி வரையில் பணத்தை பெற்றுள்ளனர்.
பொதுமக்களிடம் வாங்கிய பணத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா உள்ளிட்ட பல காரணங்களை கூறி மாதம் மாதம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட தவணை பணத்தை கொடுக்கவில்லை என்றும், இது குறித்து அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்று காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், பணம் கொடுத்த அனைவரும் சேர்ந்து கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறி, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு, நாங்கள் ஆளும் கட்சியினர் எங்களை ஒன்று செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக பணத்தை இழந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
சுமார் மூன்று கோடிக்கு மேல் பண மோசடி ஈடுபட்ட திமுக நகர துணை சேர்மன் மற்றும் திமுக நிர்வாகியான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளனர்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.