தேனியில் தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கம்பம் நகர திமுக துணை சேர்மன் மற்றும் அவரது கணவரான திமுக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி துணை சேர்மன் சுனோதா மற்றும் அவரது கணவரான திமுக கம்பம் நகர தெற்குச் செயலாளராக செல்வகுமார் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் ஜவுளி நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி தருவதாகவும், நான்கு வருடங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி, சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மூன்று கோடி வரையில் பணத்தை பெற்றுள்ளனர்.
பொதுமக்களிடம் வாங்கிய பணத்திற்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா உள்ளிட்ட பல காரணங்களை கூறி மாதம் மாதம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட தவணை பணத்தை கொடுக்கவில்லை என்றும், இது குறித்து அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்று காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், பணம் கொடுத்த அனைவரும் சேர்ந்து கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறி, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு, நாங்கள் ஆளும் கட்சியினர் எங்களை ஒன்று செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக பணத்தை இழந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
சுமார் மூன்று கோடிக்கு மேல் பண மோசடி ஈடுபட்ட திமுக நகர துணை சேர்மன் மற்றும் திமுக நிர்வாகியான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.