பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில்
மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் ,ஞாயிறு விடுமுறை,தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் என இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையம் , இலவச தரிசனம் ,சிறப்பு வழி கட்டண வரிசைகளில் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றம் துவங்கி 28 ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பாதயாத்திரையாக அலகு குத்தி காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடி பாடி வருகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.