Categories: தமிழகம்

கோவையில் 40 வயதுக்கு மேற்பட்ட திருமணமான 3 ஆண்கள் அடுத்தடுத்து மாயம் : காவல் நிலையத்தில் மனைவிகள் புகார்!!

கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் திருமணமான 3 ஆண்கள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43). கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி இவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுள்ளார்.

மேலும், மாலை 6 மணிக்கு தனது மனைவி புஷ்பாவுக்கு போனில் அழைத்து விடு திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை தேடி வருகின்றனர்.

அன்னூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 44). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். இந்த சூழலில் நேற்று வீட்டில் யாரிடமும் கூறாமல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி தனலட்சுமி. லோகநாதனைப் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமானவரை தேடி வருகின்றனர்.

பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). உடல் நலக்குறைவால் இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி பச்சாபாளையம் முருகன் கோவில் அருகே அமர்ந்திருந்த இவர் திடீரென மாயமானது,

இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வடிவேலை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

8 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

8 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

9 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

9 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

10 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

10 hours ago

This website uses cookies.