ராணிப்பேட்டை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை அருகே உள்ள காரை புது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62). இவரது மனைவி குணசுந்தரி (வயது 52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அறிவு மற்றும் ரமேஷ் (வயது 30) உள்ளனர்.
கடந்த 4 வருடங்களுக்கு முன் பெரிய மகன் அறிவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளைய மகன் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டு வந்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
ரமேஷுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது தினந்தோறும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு ரமேஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாய் தந்தையினர் விரக்தியில் நமக்கு இனி யார் உண்டு என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தை அறிந்த அமைச்சர் எம்.ஆர் காந்தி இறந்தவர்களின் குடும்பத்தினரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.