தமிழகத்தில் போதை வஸ்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத போதை, கஞ்சாப் பொருட்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்-
இந்த நிலையில் இன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இளைஞர் ஒருவர் சந்தேகிக்கும்படியாக நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் பிரவீன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
பிரவீன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல்லில் இருந்த அவரது கூட்டாளிகள் தர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.