Categories: தமிழகம்

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது.

இதனை எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி(47), சந்திரன்(65), சுரேஷ்(65), மண்ணாங்கட்டி(55) உள்ளிட்ட ஆறு பேரும் கள்ளச்சாரய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர்.

ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுவை தனியார் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதித்தனர்.

இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணி வேல் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் எக்கியர்குப்பம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது மது அருந்தி மயக்க நிலையில் இருந்த தெய்வமணி (35), செந்தமிழன் (35) கிருத்திகை வாசன் (56),
ரமேஷ் (52), ராஜமூர்த்தி (60) ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கிராமம் முழுவதும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வீரானந்தம் (41), விஜயன் (63), வேல்முருகன் (51), ராமு (75), மண்ணாங்கட்டி (60) ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,
தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் சாராயம் அருந்திவிட்டு யாரேனும் மயக்கத்தில் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் சாராயம் வாங்கி குடித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொடும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது மேலும் இவ்வளவு தங்கு தடை இன்றி மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் கிடைக்க பெற்றுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காவலர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் மரக்காணம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

15 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

15 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

16 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

17 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

17 hours ago

This website uses cookies.