ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயன்ற திருடர்கள்: காலை இழந்த பயணி: கொடூர சம்பவம்…!!

ரயில்களில் ஜன்னலோரம் செல்போன்களை கையில் வைத்திருக்கும் பயணிகளிடமும் படிக்கட்டுகளில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் பயணிகளைடமும் செல்போனை பறிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயிலில், வடமாநிலத்தை சேர்ந்த கிரண்குமார் என்னும் இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார்.

கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது, கிரண்குமார் ரயில் படியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் கிரண்குமாரின் செல்போனை பறிக்க முயற்சித்தனர். இதில் கிரண்குமார் ரயிலில் இருந்து கீழே விழுந்த நிலையில், வலது கால் துண்டாகி, இடது கால் பாதம் வெட்டுப்பட்டது. சம்பவத்தை அறிந்த ரயில்வே போலீசார் கிரண்குமாரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த செல்போன் ஒன்றை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், செல்போன் சுந்தரேசன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பின்னர் யுவராஜ் மற்றும் ஹரி பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா போதையில் செல்போன் பறிக்க முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

மற்றொரு குற்றவாளியான சுந்தரேசன் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sudha

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

7 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

8 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

9 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

9 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

9 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

10 hours ago

This website uses cookies.