திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே உள்ள வாசனம்பட்டு கிராமத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியற்குட்பட்ட திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனும் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கலையரசன் (37). இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், யாமநாத் (4) என்ற மகனும் இருந்தனர்.
நேற்றிரவு வழக்கம் போல தூங்கச் சென்ற இவர்கள், அதிகாலை நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கிராம மக்கள் மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தினர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதங்களைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்ற பல்வேறு காரணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தற்கொலை தொடர்பாக கடிதம் போன்ற தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.