காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!!
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் ஆகிய மூன்று பேர் நேற்று இரவு மதுக்கரை செட்டிபாளையம் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி கட்டு, கட்டாக பணத்தை அடுக்கிக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மதுக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். சந்தேகப்படும்படி நின்ற அந்த நான்கு சக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் கட்டு, கட்டாக ரூபாய் 78 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் மூன்று பேரையும் கைது செய்து மதுக்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் திருச்சூர் மாவட்டத்தில் நகை பட்டறையில் வேலை செய்து வருவதாகவும், அங்கு இருந்து நகைகளை கொண்டு வந்து கோவையில் பல்வேறு நகை கடைகளில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறி உள்ளனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.