காரில் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டிருந்த 3 பேர்… மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் : ரூ.78 லட்சம் பறிமுதல்!!
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் ஆகிய மூன்று பேர் நேற்று இரவு மதுக்கரை செட்டிபாளையம் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி கட்டு, கட்டாக பணத்தை அடுக்கிக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மதுக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். சந்தேகப்படும்படி நின்ற அந்த நான்கு சக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் கட்டு, கட்டாக ரூபாய் 78 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த், நிகில், சுரேஷ் மூன்று பேரையும் கைது செய்து மதுக்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் திருச்சூர் மாவட்டத்தில் நகை பட்டறையில் வேலை செய்து வருவதாகவும், அங்கு இருந்து நகைகளை கொண்டு வந்து கோவையில் பல்வேறு நகை கடைகளில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறி உள்ளனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.