Categories: தமிழகம்

தனியார் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்… பல்லடத்தில் பகீர் : போலீசார் விசாரணை,!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு 15 வயதில் தரணி தேவி மற்றும் 13 வயதில் மோகனப்பிரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு 15 வயதில் கௌசல்யா என்ற மகளும் உள்ளார்.

தரணிதேவி மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெறாதால் மறுதேர்வுக்காக படித்து வந்துள்ளனர்.

தரணி தேவியின் தங்கை மோகனப்பிரியா அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று காலை பெற்றோர்கள் வேலைக்கு சென்ற போது வீட்டில் சொல்லாமலேயே மூன்று பேரும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்தபோது மூன்று பேரும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தரணி தேவி தான் சென்னைக்கு செல்வதாகவும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் அளித்த புகாரி அடிப்படையில் மாணவிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

1 hour ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

2 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

3 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

3 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

4 hours ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

5 hours ago

This website uses cookies.