புதுச்சேரி: புதுச்சேரியில் உலோகத்தால் ஆன 3 சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
புதுச்சேரியில் உலோகத்தால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று புதுச்சேரியில் சென்ட்ராயன் தெரு என்ற பகுதியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு 3 உலோக சிலைகளை கைப்பற்றியுள்ளனர். நடராஜர் சிலை, சிவன் சிலை மற்றும் விஷ்ணு சிலை ஆகிய மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து 1980க்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சிலைகள் 600 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்பதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஜோசப் கொலம்பானி என்பவர் இந்த சிலைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவர் உயிரிழந்துவிட்ட நிலையில் இந்த சிலைகளை அவர் யாரிடம் இருந்து வாங்கினார், அதற்கான ஆவணங்கள் எங்கு உள்ளன என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த சிலைகள் எந்த தமிழக கோவில்களுக்குச் சொந்தமானவை என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.