கோவை : கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து குருவி சுடும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக வந்த பொழுது அவர்களை பிடித்து விசாரித்து இருக்கின்றனர். மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்கள் மூன்று பேரையும் தணிக்கை செய்திருக்கின்றனர். ரோந்து போலீசாரின் தணிக்கையின் போது அவர்களிடமிருந்து குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தன.
உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பது தெரிய வந்தது. சமயபுரம் பகுதி சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
தற்பொழுது கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது குருவி சுடும் பழக்கம் உடைய இவர்கள், குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என நினைத்திருக்கின்றனர்.
முன்னதாகவே ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்ற ரோந்து போலீஸாரால் மூன்று பேரும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போலீசார் கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மூவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.