சென்னை: ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து வட சென்னை பகுதியில் விற்பனை செய்த பெண் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியில் பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஓட்டேரி போலீசார் புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவல் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அந்த வீட்டில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த வீட்டிலிருந்த புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரவள்ளி (60) நாகவள்ளி (34) புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (எ) அருப்பு கஸ்தூரி (50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பெட்டலங்களாக அதைப் பிரித்து ஓட்டேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.