விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு வயது ஒரு வித்தியாசமாக தெரியவில்லை அந்த பெண்ணும் சிறுவன் மீது காதல் வயப்படவே இருவரும் தனிமையில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர் இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடையில் உடன் வேலை செய்தவர்களுக்கும் இருவரும் பழகிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரித்த போது சிறுவன் அந்த பெண்ணை அக்கா என்று கூறிய நிலையில் தீவிர விசாரணையில்
முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து பெற்றோர் சுதாரித்து கொண்டு இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தபோது இருவரும் ஒன்றாக சுற்றி திரிவதை கண்டுபிடித்தனர்
மேலும் இதையடுத்து அந்த பெண்ணை சிறுவனின் பெற்றோர் கண்டித்த நிலையில் இருவரும் தங்களது காதலை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து பழகி வந்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரது பெற்றோர் கிளாம்பாக்கத்திற்கு வந்து மகனை மீட்ட நிலையில் அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர் 15 வயது சிறுவனை திருமணம் ஆகாத 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள அழைத்து சென்றபோது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.