தமிழகம்

வாலிபால் ஆடிய மாணவியின் வாழ்கையில் விளையாட்டு.. குமரியில் நடந்த கோரம்!

குமரியில், வாலிபால் விளையாடி விட்டு திரும்பிய பள்ளி மாணவியை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க தந்தை இப்போது வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளிக்கு வெளியே அந்த மாணவி சாலை ஓரத்தில் நின்றதை பார்த்து அங்கு நின்ற 37 வயது மதிக்கத்தக்க ஒருவர், ‘ஏன் இங்கு நிற்கிறாய்’ எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார். உடனே, அருகில் இருக்கும் வீட்டைக் காட்டி ‘இது எனது வீடு தான், நீ மேலே மாடியில் பாத்ரூம் சென்று வா’ எனக் கூறியுள்ளார். எனவே, அவர் மேலே பாத்ரூம் சென்றுவிட்டு கீழே இறங்கி வந்த போது, அவரை அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து, அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று பூட்டி வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!

இதனையடுத்து, சிறுமி அழுதபடி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்..விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை.!

மரணப்படுக்கையில் ஷிஹான் ஹுசைனி 1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. இவர்…

19 minutes ago

நிலம் தந்த பாஜக.. பாதுகாக்க முயற்சிக்கும் காங்கிரஸ்.. ரன்யா ராவைச் சுற்றுல் அரசியல் பின்புலம்!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் மீது ஆளும் காங்கிரஸ் அமைச்சர் - பாஜகவினர் இடையே…

27 minutes ago

வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!

தெலுங்கானா நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டியின் (44) குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐதராபாத் ஹப்சிகுடாவிற்கு குடிபெயர்ந்து…

55 minutes ago

அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

1 hour ago

மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!

2017ல் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம்வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படத்தை…

1 hour ago

45 வயது ஆணுடன் சென்ற பள்ளி மாணவி.. காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பகீர்!

கர்நாடகாவில் 45 வயது ஆண் மற்றும் 10ம் வகுப்பு மாணவி காணாமல் போன நிலையில், காட்டுக்குள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.…

2 hours ago

This website uses cookies.