மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி, இரு பெண் பிள்ளைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பட்டதாரியான இவர், கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், மதுரை பேரையூரை சேர்ந்த வீரசெல்வி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இருபெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில், மதுரை மாநகர் அனுப்பானடியை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி பாபுநகர் 4 ஆவது தெரு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் குமார் சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவ்வப்போது, வீர செல்வியின் பணத்தை எடுத்துச் சென்று மது அருந்துவது, வெளியில் தவறான செயல்களில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செந்தில்குமார் நேற்று மாலை திடிரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் மனைவியிடம் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சில நிமிடங்களிலயே செந்தில்குமாரின் மனைவி வீர லெட்சுமி மற்றும் மகள்களான தனுஸ்ரீ (13 ), மேகா ஸ்ரீ (8) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள் மாலையில் இருந்து கதவு திறக்கப்படாத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூவரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மூவரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவன் வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்த நிலையில் கணவன் – மனைவியிடையே ஏற்பட்ட சிறுசிறு தகராறால், எதுவும் அறியாத 8 மற்றும் 4ஆம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்து பெண் குழந்தைகளும் பெற்றோருடன் பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் – மனைவி 2 பெண் குழந்தைகளுக்கு என நால்வரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.