இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – குடியாத்தம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வருவதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் குடியாத்தம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, நேற்று போலீசார் உள்ளி கூட்ரோடு மற்றும் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக வந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த குடியாத்தம் போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தினகரன் (வயது25) சந்தோஷ்குமார் (வயது28), நேதாஜி(வயது35), சந்தோஷ் (வயது23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.