இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – குடியாத்தம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வருவதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் குடியாத்தம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, நேற்று போலீசார் உள்ளி கூட்ரோடு மற்றும் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக வந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த குடியாத்தம் போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தினகரன் (வயது25) சந்தோஷ்குமார் (வயது28), நேதாஜி(வயது35), சந்தோஷ் (வயது23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.