கடலூர் : பண்ருட்டி அருகே நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொள்ளை கிராமத்தில் கார் டிரைவர் செந்தில் நாதன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் முதல் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.இந்நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் அஸ்வினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதாவது முந்திரி தோப்பில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், சிறுவனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கீழக்கொல்லை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் காவல்துறையினர் சிறுவன் மரணம் குறித்து சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டு பெண் ரஞ்சிதா (21) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்வந்தை அழைத்து சென்றார் என்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ரஞ்சிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.