நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (4). சிறுவன் வழக்கமாக இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.
அந்த பாத்திரம் தலையில் வசமாக சிக்கிய நிலையில், அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து. சிறுவன் அலறல் சத்தம் போட்ட நிலையில், பெற்றோரும் பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாத்திரத்தை எடுக்க பலரும் போராடிய நிலையிலும், அதனை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில், மருத்துவமனைக்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளைக் கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து, சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
4 வயது சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.