கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 முதியவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி அவர் வேலைக்கு செல்லும் போது தனது 3 1/2 வயது பேத்தியையும் உடன் அழைத்து சென்றார்.
பேத்தி மாடியில் விளையாடி கொண்டு இருக்க அவர் வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டு உரிமையாளரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த முன்னாள் மின் ஊழியர் முருகன் (78) என்பவர் சிறுமியை அறைக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
வலி தாங்காமல் கதறிய சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அவரது பாட்டி சிறுமியை முதியவரிடம் இருந்து மீட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து முருகனை செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.