கோவை : 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்து வந்த மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக கடுங்காவல்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.