திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 05.10.2020 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று சங்கரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் முறையாக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்த விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் பாராட்டினார்.
மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பெறப்படும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.