திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அசார் என்கின்ற ஜெகபர் சாதிக்.இவர் கடந்த 08.03.2020 ல் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெகபர் சாதிக்கை சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்க: ’அவரு என் மாமனார்..’ மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்.. தகாத உறவால் விபரீதம்!
இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞர் அசார் என்கின்ற ஜகபர் சாதிக் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 6 லட்சமும் தர வேண்டுமென திருவாரூர் மகிளா நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் முறையாக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன் கரட் மெதுவாக பாராட்டினார்.
மேலும் தொடர்ந்து சிறுமி மற்றும் பெண்களுக்கு எதிரான புகார்கள் வந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.