தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஆவணங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, காசி லேப்டாப், மொபைலில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாகவும் மேலும் 400 ஆபாச வீடியோக்கள் லேப்டாப்பில் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.