திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முள்ளிப்பாடி செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, சந்தேகத்தின்படி வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன் (29), சதீஷ்குமார்(26) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சரவணகுமார் (27) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட 3 நபர்கள் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.