திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முள்ளிப்பாடி செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, சந்தேகத்தின்படி வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன் (29), சதீஷ்குமார்(26) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சரவணகுமார் (27) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட 3 நபர்கள் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
This website uses cookies.