கோவை: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.
கோவை அரசு பள்ளிகளில் இருந்து, 5 பேர் எம்.பி.பி.எஸ்., 3 பி.டி.எஸ்., உட்பட 8 பேர், முதல் நாள் கலந்தாய் வில் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர்.
சென்னையில் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந் தாய்வு நேற்றும், இன்றும் நடக்கிறது.
கோவையில் இருந்து, 49 மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்று இருந்தனர். இதில் நேற்றைய கலந்தாய்வில் 15 பேர் பங்கேற்றனர். முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்றதில், ஒண்டிப்புதூர் ஆர்.சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்வேதா சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையும், தொண்டாமுத்துதூர் பள்ளி மாணவி சுருதி திருப்பூர் மருத்துவ கல்லூரியும், சமத்தூர் எஸ்.வி.பள்ளி மாணவன் யுவன் ராஜ் ஈரோடு மருத்துவ கல்லூரியும், காட்டம்பட்டி டி.எஸ்.ஏ., பள்ளி மாணவி அபர்ணா விருதுநகர் மருத்துவ கல்லூரியும், ஒப்பணக்கார வீதி அரசு பள்ளி மாணவன் அப்ரின் ஜெகன் கரூர் மருத்துவ கல்லூரியும், ரங்கநாதபுரம் அரசு பள்ளி மாணவி தேவி சேலம் அன்னபூர்ணா மருத்துவ கல்லூரியும் தேர்வு செய்தனர்.
முத்து கவுண்டனூர்அரசு பள்ளி மாணவி சங்கீதா, ராஜ வீதி அரசு பள்ளி மாணவி பூர்ணிமா ஆகியோர் கோவை ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளனர். கோவையில் இருந்து தகுதி பெற்ற 49 பேரில், 15 பேர் முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்றனர். மாலை வரை 8 பேர் விருப்ப கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.
தொடர்ந்து இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.