45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்!
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி உள்ளது. தமிழகம் தற்போது போதைப்பொருள் விற்பனை மையமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக், திமுக அயலக அணி பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக இதுவரை 45 முறை போதைப்பொருளை இவர் கடத்தி உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
அதன் மூலம் கிடைத்த பணத்தில் திமுக நிர்வாகிகளுக்கு நிதி அளித்ததாகவும், ஹோட்டல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை முறையாக விசாரித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஜாபர் சாதிக் முதலமைச்சரிடம் நிதி வழங்குவது போலவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி வழங்குவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. காவல்துறையினரிடம் ஜாபர் சாதிக் நட்போடு இருப்பது போல புகைப்படம் வெளியாகி வருகிறது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஜாபர் சாதிக் மீது 2019ஆம் ஆண்டே மலேசியாவுக்கு போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 கோடி மதிப்பிளான போதை பொருட்கள், ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதைப்பொருட்கள், நேற்று கூட புதுக்கோட்டை கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதை பொருட்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் தான் கைது செய்து வருகின்றனர்.
தமிழக போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கி வருகின்றனர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடைபெற்ற மனித சங்கிலி போரட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.