அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த 4ஆம் வகுப்பு மாணவிகள்.. விசாரித்ததில் அதிர்ச்சி : தலைமை ஆசிரியரின் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் அக்கிரமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் குருராஜ் என்பவர் மகன் ஜான்சன்(58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜான்சன் அப்பள்ளியில் படிக்கும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை அடுத்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் இவர் மீது விளாத்திகுளம் பகுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.