சின்னாளபட்டியில் வாஷிங் மெஷினுக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த கலைமகள் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்க்குள் பாம்பு ஒன்று இருப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புனித்ராஜ், வீரர்கள் அழகேசன், கார்த்திகேயன் , திருமூர்த்தி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கொண்ட மீட்பு படையினர் மணிகண்டன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடியதில் அவரது வீட்டில் இருந்த பழைய வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து வாஷிங் மெஷினை அப்படியே வெளியில் தூக்கி வந்து தேடினர். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த பாம்பு தப்பியோட முயன்றது.
ஆனால், சாமர்த்தியமாக தீயணைப்பு வீரர்கள் அதனை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு கொடிய விஷமுள்ள ஐந்து அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என மீட்புபடையினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த பாம்பினை சாக்கு பையில் போட்டு கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.