கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 64. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகள் மோனிகா (24). பாலகிருஷ்ணனின் தங்கை பாக்கியம் வயது 55. இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள எல். ஆர். ஜி. நகரில் வசித்து வருகிறார்.
இவரது கணவர் பண்ணீர்செல்வம்.வயது 60. இவரது மருமகள் ஜமுனா வயது 30. ஜமுனா சிறுமுகையிலா புதிய வீடு வாங்கியுள்ளார் இதன் கிரகப்பிரவேசம் இன்று(12.2.23) நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியம் அவரது மருமகள் ஜமுனா வயது 40 மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கஸ்தூரி., சகுந்தலா ஆகியோர் நேற்று சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் அவரது மகள் மோனிகா தங்கை பாக்கியம் மருமகள் ஜமுனா கஸ்தூரி சகுந்தலா ஆகியோர் நேற்று மாலை நான்கு மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
பாலகிருஷ்ணன் காரில் உட்கார்ந்திருந்தார். பேரன் பேத்திகள் ஆற்றின் கரையோரப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் பாக்கியம் ஜமுனா சகுந்தலா கஸ்தூரி ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்துகூக்குரல் இட்டனர். அவர்களது கூக் குரலை கேட்டதும் காரில் இருந்து இறங்கி வந்த பாலகிருஷ்ணன் உடனடியாக ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆயினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம் ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர் ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்துச் செல்லப்பட்டார்..
உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் பாலகிருஷ்ணன், மகள் மோனிகா.கஸ்தூரி ஆகியோரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சகுந்தலாவின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் மாலை நேரம் இருட்டத் தொடங்கியதால் தீயணைப்பு துறையினர் தேடும்பணியை கைவிட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த உறவினர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம் :
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (16), உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் (16) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கோவையிலிருந்து மதியம் 3.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்துள்ளார்.
இவர்கள் ஆறு பேரும் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள உப்பு பள்ளம் என்னும் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்
அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதில் ஆறு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனால் ஜீவானந்தம் மற்றும் கௌதம் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகநாதன், மற்றும் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களின் உடலை தேடி வருகின்றனர் சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.