இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடிஇலைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர் அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்
தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன் ,மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் பீடி இலை கடத்தலில் ஈடுபட்ட மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.