விழுப்புரம் : நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 வயது சிறுமி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன மூர்த்தி மகள் இளம்பெண் ஈஸ்வரி (18 வயது). தனது உறவினர் ராமமூர்த்தி (சித்தப்பா) மகளான 5 வயது சிறுமி கவி நிலா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஈஸ்வரி மற்றும் கவிநிலா ஆகிய இருவரும் சாலையை கடந்தனர்.
அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுமி கவிநிலவு உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயத்துடன் இளம்பெண் ஈஸ்வரி ரத்தவெள்ளத்தில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக இடித்த காரை விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இருவேல்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் விபத்தை தவிர்க்கும் வண்ணம் அப்பகுதியில் உயர்மின் விளக்கு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணநல்லூர் போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் நீண்ட நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில் 2 மணி நேரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.